• Tue. Jul 1st, 2025

24×7 Live News

Apdin News

திருப்புவனம் கோவில் காவலாளி வழக்கில் 5 காவலர்கள் கைது – விடியவிடிய நடந்தது என்ன?

Byadmin

Jul 1, 2025


திருப்புவனம் கோவில் காவலாளி வழக்கு, அஜித்குமார் வழக்கு
படக்குறிப்பு, திருப்புவனம் காவல் நிலையத்தில் 5 காவலர்களிடம் விசாரணை நடைபெறுகையில் எடுக்கப்பட்ட படம் (இடது) உயிரிழந்த காவலாளி அஜித் குமார் (வலது)

திருப்புவனம் கோவில் காவலாளி அஜித்குமார் மரண வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. உடற்கூராய்வு அறிக்கைக்குப் பின்னர் இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு, 5 காவலர்கள் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

அஜித்குமார் தாக்கப்பட்டதாக கூறப்படும் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் மாட்டுத் தொழுவத்தில் நீதிபதி நேரில் ஆய்வு செய்துள்ளார்.

கோவிலுக்கு வந்த பக்தர் ஒருவரின் நகை திருடு போனதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் காவல்துறையினர் தாக்கியதால் உயி​ரிழந்​தார் என்பது குற்றச்சாட்டு.

இதனிடையே, சிவகங்கை மாவட்ட எஸ்பியை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. அவருக்கு பதிலாக ராமநாதபுரம் மாவட்ட எஸ்பியிடம் கூடுதல் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

By admin