• Sat. Jun 20th, 2026

24×7 Live News

Apdin News

தீபச்செல்வனின் நூல்கள் தடுப்பு | மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணை

Byadmin

Jun 20, 2026


சுங்கத்துறையால் தடுத்து வைக்கப்பட்ட ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்கள் தொடர்பாக கொழும்பில் உள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணை நடத்தப்பட்டது.

கடந்த வியாழக்கிழமை (18) நடத்தப்பட்ட விசாரணையின்போது எழுத்தாளரின் தரப்புச் சார்பாக சட்டத்தரணி கலாநிதி விரஞ்சன ஹேரத் மற்றும் சட்டத்தரணி நடராஜா காண்டீபன் ஆகியோர் முன்னிலையாகினர்.

இதேவேளை, எதிர்த்தரப்புவாதிகளாக முறைப்பாடு செய்யப்பட்ட பாதுகாப்பு அமைச்சு, கலாசார அமைச்சு மற்றும் சுங்கப்பிரிவு சார்பில் சட்டத்தரணி மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

தமிழ் மக்கள் சார்ந்த நினைவுகளையும் கதைகளையும் எழுதுகின்ற உரிமை தமக்கு உள்ளமையை விசாரணையின்போது சுட்டிக்காட்டியதாகவும் இந்த விடயத்தில் விரைவில் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருப்பதாகவும் விசாரணையின் முடிவில் தீபச்செல்வன் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

By admin