• Tue. Jul 8th, 2025

24×7 Live News

Apdin News

தேர்தல் பிரச்சார பயணத்தை தொடங்கினார் இபிஎஸ்: ஒரே மேடையில் பாஜக தலைவர்களும் பங்கேற்பு | EPS begins election campaign tour

Byadmin

Jul 8, 2025


கோவை: தமிழகத்​தில் 2026 சட்​டப்​பேரவை தேர்​தலை​யொட்டி ‘மக்​களை காப்​போம், தமிழகத்தை மீட்​போம்’ என்ற பிரச்​சார சுற்​றுப்​பயணத்தை மேட்​டுப்​பாளை​யத்​தில் அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி நேற்று தொடங்​கி​யுள்​ளார். இதில் தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன் உள்​ளிட்​டோரும் பங்​கேற்​றனர்.

தமிழகத்​தில் அடுத்த ஆண்டு சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற உள்​ளது. இதையொட்டி அதி​முக சார்​பில் ‘மக்​களை காப்​போம் தமிழகத்தை மீட்​போம்’ என்ற பெயரில் சுற்​றுப்​பயணத்தை அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கோவை மாவட்​டம் மேட்​டுப்​பாளை​யத்​தில் நேற்று தொடங்​கி​னார்.

காலை​யில் மேட்​டுப்​பாளை​யம் வன பத்​ர​காளி​யம்​மன் கோயி​லில் சுவாமி கும்​பிட்டு சுற்​றுப்​பயணத்தை ஆரம்​பித்​தார். தேக்​கம்​பட்​டி​யில் விவ​சா​யிகள், நெச​வாளர்​களு​டன் கலந்​துரை​யாடிய பழனி​சாமி, மாலை​யில் மேட்​டுப்​பாளை​யம் காந்தி சிலை அரு​கில் இருந்து நகர பேருந்து நிலை​யம் வரை ‘ரோடு ஷோ’ நடத்தி மக்​களைசந்​தித்​தார். அப்​போது, சாலை​யின் இரு​புற​மும் திரண்டிருந்த மக்​கள் அவருக்கு பூரண கும்​பம் ஏந்​தி​யபடி​யும், மலர் தூவி​யும் உற்​சாக வரவேற்பு அளித்​தனர்.

அதை தொடர்ந்​து, மேட்​டுப்​பாளை​யம் பேருந்து நிலை​யம் அருகே பிரச்​சார வாக​னத்​தில் இருந்து பழனி​சாமி பேசி​ய​தாவது: ‘மத்​திய அரசு தமிழகத்​துக்கு எது​வும் தரவில்​லை, எது​வும் செய்​ய​வில்​லை’ என கீறல் விழுந்தரெக்​கார்டு போல திரும்ப திரும்ப ஸ்டா​லின் பேசு​கிறார். இதே திமுக 1999-ல் பாஜக ஆட்​சி​யில் கூட்​ட​ணி​யில் இருந்​தார்​கள். பிறகு காங்​கிரஸ் ஆட்​சி​யிலும் அதி​காரத்​தில் இருந்​தார்​கள். 16 ஆண்​டு​கள் திமுக அதி​காரத்​தில் இருந்​தும் தமிழகத்​துக்கு என்ன செய்​தீர்​கள். ஆட்சி அதி​காரத்தை மத்​தி​யில் பெற்​றுக்​கொண்டு கொள்​ளை அடிப்​பது திமுக​வின் குறிக்​கோள்.

திமுக ஆட்​சிக்கு வந்​தவுடன் 52% மின் கட்​ட​ணத்தை உயர்த்​தி​யது. 100 சதவீதம் வீட்டு வரியை உயர்த்​தி​யது. கடைகளுக்கு 150 சதவீதம் அதி​கரித்​தனர். இது​தான் இன்​றைய நிலை. தமிழகத்​தில் சட்​டம் – ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. பெண்​கள் வெளியே நடமாட முடிய​வில்​லை.அப்​பாவி மக்​களுக்கு பாது​காப்பு இல்​லை. நாங்​கள், மக்​களுக்கு நன்மை செய்ய வேண்​டும் என்ற கட்​சி​யுடன் கூட்​டணி வைத்​துள்​ளோம். மிசா சட்​டத்​தில் உங்​களை கைது செய்த காங்கிரஸ் கட்​சி​யோடு நீங்​கள் கூட்​டணி வைத்​துள்​ளீர்​கள். இன்​னும் பல கட்​சிகள் எங்​கள் கூட்​ட​ணி​யில் சேரும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் பேசும்போது, ‘‘பழனி​சாமி​யின் பிரச்​சார பயணம் வெற்றி பெற வாழ்த்​துகள்’’ என்​றார். மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன் பேசும்​போது,‘‘தி​முகவை வீட்​டுக்கு அனுப்​பும் உங்​களது பயணம் வெற்றி பெற வாழ்த்​துகள்’’ என்​றார். பிரச்​சா​ரக் கூட்​டத்​தில், அதி​முக முன்​னாள் அமைச்​சர்​கள் எஸ்​.பி.வேலுமணி, கே.பி.​முனு​சாமி, நத்​தம் விஸ்​வ​நாதன் உள்​ளிட்​டோர் கலந்து கொண்​டனர்​. அதி​முக தொண்​டர்​களு​டன்​, பாஜக உள்​ளிட்​ட கூட்​ட​ணி கட்​சி தொண்​டர்​களும்​ கலந்​து கொண்​டனர்​.

– டி.ஜி.ரகுபதி / இல.ராஜகோபால்



content_bottom">

By admin