• Sat. Jul 12th, 2025

24×7 Live News

Apdin News

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக மீண்டும் போராட்டம்!

Byadmin

Jul 11, 2025


யாழ். தையிட்டியில் பொதுமக்களின் காணிகளில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் பௌர்ணமி தினமான இன்றும் மேற்கொள்ளப்பட்டது.

இன்று காலை ஆரம்பமான இந்தப் போராட்டம் மாலை 6 மணி வரை முன்னெடுக்கப்பட்டது.

விகாரை அகற்றப்பட்டு, காணிகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தும் நோக்கத்தோடு நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் காணி உரிமையாளர்கள் , அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.

By admin