1
யாழ். தையிட்டியில் பொதுமக்களின் காணிகளில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் பௌர்ணமி தினமான இன்றும் மேற்கொள்ளப்பட்டது.
இன்று காலை ஆரம்பமான இந்தப் போராட்டம் மாலை 6 மணி வரை முன்னெடுக்கப்பட்டது.
விகாரை அகற்றப்பட்டு, காணிகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தும் நோக்கத்தோடு நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் காணி உரிமையாளர்கள் , அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.