• Wed. Jul 15th, 2026

24×7 Live News

Apdin News

தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிக்கும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ்?

Byadmin

Jul 15, 2026


நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கடந்தமுறை தாக்கல் செய்த தொகுதி மறுவரையறை மசோதா தோல்வியடைந்தாலும், மீண்டும் தாக்கல் செய்ய மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

இந்நிலையில் இந்த மசோதாவுக்கு சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆதரவளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தேசியவாத காங்கிரஸின் இரு பிரிவுகளையும் சேர்ந்த மூத்தத் தலைவர்கள், முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் உடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதாக செய்திகள் வெளியானநிலையில், இந்த தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எம்.பி. சுப்ரியா சுலேவிடம் (சரத் பவார்)இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளிக்க மறுத்த அவர், மசோதாவின் இறுதி வடிவத்தைப் பொறுத்தே தங்கள் அணியின் நிலைப்பாடு அமையும் என தெரிவித்தார்.

“அனைத்து மாநிலங்களிலும் தொகுதிகளை 50 சதவீதம் அதிகரிக்க அரசு வழிவகை செய்து, அதன் செயலாக்கத்தையும் தெளிவாக விவரித்தால், நாங்கள் அதை ஆதரிப்போம்,” என்று சுலே செய்தியாளர்களிடம் கூறினார்.

By admin