தி.மு.க பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் கூறியதாவது:-
நிதி அமைச்சர் என்பது சாதாரணமானது அல்ல. 50 ஆண்டு காலம் சட்டசபையில் இருந்தும் கூட சில நேரங்களில் சிலது புரியாமல் போய்விடும்.
இப்போது உள்ளவர்கள் புதியவர்கள், நிதி செயலாளர் சொல்வது தான் சரியாக இருக்குமே தவிர நிதி அமைச்சர் சொல்வது சரியாக இருக்காது. நிதி செயலாளர் தான் அனைத்தும் தெரிந்தவராக இருப்பார்.
தமிழக அரசு வெளியிட்டது வெள்ளை அறிக்கை கிடையாது அது கருப்பு அறிக்கை. த.வெ.க. ஆட்சி நீடிக்குமா? நீடிக்காதா? என்பது ஆட்சியில் இருப்பவர்கள் செயல்பாடுகளை பொறுத்தது. தமிழ்நாட்டு செய்தித் தாள்களில் நான் பார்க்கும் செய்திகள் வன்முறை, கொலை, பாலியல் தொல்லை, சட்டம் ஒழுங்கு சீர்கேடு என படிக்க முடியவில்லை.