பான் இந்திய அளவில் புகழ்பெற்ற தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகரான விஜய் தேவரகொண்டா கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ரணபாலி’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் ராகுல் சங்கிருத்யன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரணபாலி’ திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தானா, அர்னால்ட் வொஸ்லூ ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அஜய், அதுல் ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.
பீரியாட்டிக் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் வை. ரவிசங்கர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
எதிர்வரும் ஓக்டோபர் மாதம் 15 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என இந்திய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதில் 1876- 78 ஆகிய ஆண்டுகளில் பிரித்தானியர்கள் இந்திய மண்ணில் தங்களுடைய அதிகாரத்தை நிலை நாட்டுவதற்காக எட்டு மில்லியன் இந்திய மக்களை கொன்று குவித்த துயர சம்பவத்தின் பின்னணி தொடர்பான காட்சிகள் இடம் பிடித்திருப்பதால் இப்படத்தை பட மாளிகையில் காண வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தியுள்ளது.
The post நடிகர் விஜய் தேவரகொண்டா நடிக்கும் ‘ரணபாலி’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு appeared first on Vanakkam London.