இதில் நிதி அமைச்சர் மரிய வில்சன் பேசியதாவது:-
சிறந்த அடித்தளம்
முதலமைச்சராக விஜய் பதவியேற்ற போதே, ஊழல் இல்லாத வெளிப்படைத்தன்மையுடன் கூடிய அரசாக இருக்கும் என்று உறுதியளித்தார். அதன்படி அவர் லஞ்சம்-ஊழல் என்ற வார்த்தை அடுத்த தலைமுறையினருக்கு தெரியாத அளவுக்கு சிறந்த அடித்தளம் அமைத்து வருகிறார்.
தமிழக சட்டமன்ற கூட்டம் நடைபெற்ற போது, ‘பார்ட்டி பண்ட்’ (கட்சி நிதி) என்றால் என்னவென்று தெரியாது போன்று வெளியே சென்றார்கள். அதில் ஒருவர் இந்த தொகுதியில் வெற்றி பெற்றவர் (சேகர்பாபு). அவருக்கு நான் இந்த மேடையில் இருந்து சொல்லி கொள்கிறேன்.