• Thu. Sep 3rd, 2026

24×7 Live News

Apdin News

‘நம்ப முடியாத உற்சாகமான தருணம்’ – கரும்பொருளின் முதல் தடயத்தை நெருங்கியதாக கூறும் விஞ்ஞானிகள்

Byadmin

Sep 3, 2026


பிரிஸ்டல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், பிரபஞ்சத்தில் 85%-க்கும் அதிகமான பகுதியை உருவாக்கியிருப்பதாகக் கருதப்படும் கண்ணுக்குத் தெரியாத பொருளை அளவிடும் முயற்சியில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு ஆண்டுகால ஆய்வில் பங்கேற்றனர்.

பட மூலாதாரம், Matthew Kapust/Sanford Underground Research Facility

படக்குறிப்பு, விஞ்ஞானிகள் ஒரு ஆய்வகத்தில் முதல் முறையாகக் கரும்பொருளுக்கான ஆதாரத்தைக் கண்டறிந்திருக்கலாம்.

    • எழுதியவர், டான் லிம்பு
    • பதவி, பிரிஸ்டல்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

முதன்முறையாக கரும்பொருளை (Dark Matter) கண்டறிவதற்கு தாங்கள் ஒரு படி நெருங்கிவிட்டதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர். ஆனால், இந்தக் கண்டுபிடிப்புகள் இன்னும் சுயாதீன ஆய்வாளர்களால் சரிபார்க்கப்படவில்லை.

பிரிஸ்டல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், பிரபஞ்சத்தில் 85%-க்கும் அதிகமான பகுதியை உருவாக்கியிருப்பதாகக் கருதப்படும் கண்ணுக்குத் தெரியாத பொருளை அளவிடும் முயற்சியில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு ஆண்டுகால ஆய்வில் பங்கேற்றனர்.

அமெரிக்காவில் உள்ள ஒரு நிலத்தடி ஆய்வகத்தில் அமைக்கப்பட்டுள்ள அதிக உணர்திறன் கொண்ட கண்டறியும் கருவியைப் பயன்படுத்தி, ஒரு அணுவும் மர்மமான துகளும் மோதிக்கொண்டதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.

முன்னணி ஆய்வாளரும் இயற்பியலாளருமான முனைவர் சாம் எரிக்சன், இது “கரும்பொருளை ஒரு துகளாகப் புரிந்துகொள்வதற்கான முதல் படியாக” இருக்கலாம் என்று கூறினார். ஆனால், அந்தத் துகள் இருண்ட பொருளுடன் தொடர்புடையது அல்ல என்பதையும் மேலும் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் வெளிப்படுத்தக்கூடும் என்று அவர் தெரிவித்தார்.

“மிகப்பெரிய அளவிலான அறிவியல் முயற்சிகளுக்குப் பிறகு, இது நம்பமுடியாத அளவுக்கு உற்சாகமளிக்கிறது” என்று பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் மூத்த ஆராய்ச்சி இணை பேராசிரியர் மேலும் கூறினார்.

By admin