• Fri. Aug 21st, 2026

24×7 Live News

Apdin News

நல்கொண்டா: பள்ளி முதல்வர் கொலை வழக்கில் செல்போனில் அவர் பேசிய ஒரு வார்த்தையால் துப்பு துலங்கியது எப்படி?

Byadmin

Aug 21, 2026


கல்லு ரூபா ரெட்டி, பள்ளி முதல்வரை கொன்ற 10ஆம் வகுப்பு மாணவர்கள், தெலங்கானா

பட மூலாதாரம், UGC

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

(எச்சரிக்கை: அதிர்ச்சியூட்டும் விவரங்கள் உள்ளன)

‘பாபு’ – இந்த ஒற்றை வார்த்தைதான், ஒரு கொடூரக் கொலை வழக்கில் சந்தேக நபர்களைக் கண்டறியவும், விசாரணையை முன்னெடுத்துச் செல்லவும் உதவியதாக போலீசார் கூறுகின்றனர்.

நல்கொண்டா மாவட்டம், கொண்டமல்லேபள்ளியைச் சேர்ந்த பள்ளி முதல்வர் கல்லு ரூபா ரெட்டி கொலை வழக்கில், இரண்டு மாணவர்களைக் கைது செய்துள்ளதாக நல்கொண்டா போலீசார் அறிவித்துள்ளனர்.

“ஆடம்பர வாழ்க்கைக்குப் பழகிய அவர்கள், பணத்திற்காகவே முதல்வரைக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். திருடுவதற்காகச் சென்றபோது, ​​முதல்வர் அவர்களை அடையாளம் கண்டுகொண்டதால் அவரைக் கொன்றுவிட்டனர்,” என்று காவல் கண்காணிப்பாளர் சரத் சந்திர பவார் தெரிவித்தார்.

நடந்தது என்ன?

தெலங்கானாவில் நல்கொண்டா மாவட்டம் கொண்டமல்லேபள்ளியில் உள்ள ஜேபி காலனியில் தனது கணவர் ராஜேந்தர் ரெட்டியுடன் ரூபா ரெட்டி வசித்து வந்தார்.

By admin