• Thu. Jul 3rd, 2025

24×7 Live News

Apdin News

நாகையில் தாயின் சடலத்தை காட்டில் வீசிச் சென்ற மகன்கள் – வறுமையால் நடந்த சோகம்

Byadmin

Jul 3, 2025


நாகப்பட்டினம், மூதாட்டி மரணம், வறுமை, வேளாங்கண்ணி

நாகப்பட்டினம் அருகே சாக்கு மூட்டையில் மூதாட்டி ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அவர் வேளாங்கண்ணியைச் சேர்ந்த 75 வயதான மும்தாஜ் என கண்டறியப்பட்டுள்ளது. வயது முதிர்வால் உயிரிழந்தவரின் சடலத்தை 12 நாட்கள் கழித்து அவரது மகன்கள் காட்டில் வீசிச் சென்றதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

நாகப்பட்டினம் அருகே உள்ள வடக்கு பொய்கைநல்லூர் காந்தி மகான் கடற்கரை சாலையில் தைல மரக் காடு அமைந்துள்ளது. கடந்த 27ஆம் தேதி அங்கு குப்பை கொட்டச் சென்ற வேதவள்ளி என்பவர் அங்கு சாக்கு மூட்டை ஒன்று கேட்பாரற்று இருந்ததைப் பார்த்து தன் ஊரைச் சேர்ந்த இளைஞர்களிடம் கூறியுள்ளார்.

அதே ஊரைச் சேர்ந்த சில இளைஞர்கள் தகவல் அறிந்து சென்று மூட்டையைப் பிரிக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது ஒரு சடலம் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைத அவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

பிபிசி தமிழ், வாட்ஸ்ஆப்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

மூட்டையை முதலில் பிரித்த வெங்கடேஷ் பிபிசி தமிழிடம் பேசுகையில், “மூட்டையில் கருப்பு நிற பிளாஸ்டிக் பை மற்றும் துணிகள் இருந்ததை முதலில் பார்த்தோம். எங்கள் பாதுகாப்பிற்காக செல்போனில் வீடியோ பதிவு செய்துகொண்டே மூட்டையைப் பிரித்தோம்.

By admin