மேற்கு வங்கத்தில் தேர்தல் தோல்விக்கு பின் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இரண்டுபட்டது.
உடைப்பு
திரிணாமுல் காங்கிரஸின் மொத்தமுள்ள 80 எம்.எல்.ஏக்களில் 58 பேர் அதிருப்தியாளர்களாகி தனித்து செயல்படுகின்றனர்.
அதிக எம்எல்ஏக்கள் உள்ளதால் அவர்களுக்கே எதிர்க்கட்சி அந்தஸ்தை அம்மாநில சட்டமன்ற சபாநாயகர் வழங்கியுள்ளார். அதிருப்தியாளர்களின் தலைவர் ரிதர்பா எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்துடன் உள்ளார்.
இதனிடையே இவர்கள் திரிணாமுல் காங்கிரசை அதை உருவாக்கி சக்திவாய்ந்த கட்சியாக கட்டியெழுப்பிய மம்தா பானர்ஜியிடம் இருந்து முழுமையாக பிடுங்கிக்கொள்ள தீவிரம் காட்டி வருகின்றனர்.
இது மறைமுகமாக பாஜக செய்யும் சதி என சாடும் மம்தா, தைரியம் இருந்தால் அதிருப்தியாளர்கள் பாஜகவில் சேர்ந்து தன்னை நேரடியாக எதிர்க்க வேண்டும் என சவால் விடுத்தார்.
ஆனால் அதை காதில் வாங்காத அதிருப்தியாளர்கள் திரிணாமுல் காங்கிரசை வளைத்துப்போடும் தீவிரத்தில் முதலில் கட்சி தலைமை அலுவலகத்தை கைப்பற்றினர்.
கட்சியின் சின்னம் தங்களுக்கு தான் சொந்தம் என தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில் கட்சியின் தலைவர், நிர்வாகிகளை உள்ளடக்கிய அமைப்பின் பதவிக்காலம் முடிந்துவிட்டதாக அவர்கள் வாதிட்டுருந்தனர்.
இதை பாஜகவின் கைக்கூலி என மம்தாவால் விமர்சிக்கப்படும் தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது.