• Sat. Aug 15th, 2026

24×7 Live News

Apdin News

நால்சார் சட்ட மாணவர் பதிவு சர்ச்சை: மனன் மிஸ்ராவுக்கு சிஜேபி கண்டனம் – தலைமை நீதிபதி கூறியது என்ன?

Byadmin

Aug 14, 2026


மனன் மிஸ்ரா, இந்திய பார் கவுன்சிலின் தலைவராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் உள்ளார்.

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, மனன் மிஸ்ரா, இந்திய பார் கவுன்சிலின் தலைவராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் உள்ளார்.

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

இந்திய பார் கவுன்சில், ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்ட தேசிய சட்ட ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சி அகாடமி (NALSAR) சட்டப் பல்கலைக் கழகத்தின் 2026ஆம் ஆண்டு மாணவர் பிரிவில் பட்டம் பெறும் மாணவர்களின் வழக்கறிஞர் பதிவு (enrolment) செயல்முறையை நிறுத்தி வைத்தது. பின்னர் அந்த முடிவைத் திரும்பப் பெற்றது.

அதன் பின்னர், மனன் மிஸ்ராவும் பிசிஐ-யும் சமூக ஊடகங்களில் விவாதத்தின் மையமாக மாறினர். இந்திய தலைமை நீதிபதி சூர்ய காந்த் இந்திய பார் கவுன்சிலை விமர்சித்து, இது “தனக்கும் மாணவர்களுக்கும் இடையிலான விஷயம்” என்று கூறியதுடன், பிசிஐ-யின் “தேவையற்ற தலையீடு” குறித்துக் கண்டனம் தெரிவித்தார்.

மாணவர் பதிவைத் தடை செய்யும் இந்திய பார் கவுன்சிலின் முடிவைத் தொடர்ந்து, காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கேவும் இன்ஸ்டாகிராமில், “மனன் மிஸ்ராவின் ராஜிநாமாவை கோர வேண்டிய நேரம் வந்துவிட்டதா?” என்று பதிவிட்டார்.

இந்த விவகாரத்தின் முழு பின்னணி என்ன? நால்சார் பல்கலைக் கழக சட்ட மாணவர்களின் பதிவை பிசிஐ முதலில் தடை செய்தது ஏன்? பிறகு ஏன் தனது முடிவை மாற்றிக் கொண்டது? காக்ரோச் ஜனதா கட்சியின் எச்சரிக்கை குறித்து மனன் மிஸ்ரா என்ன கூறினார்?

தலைமை நீதிபதி சூர்ய காந்த் கூறியது என்ன?

உச்ச நீதிமன்றம், நால்சார் சட்டப் பல்கலைக் கழக மாணவர்களின் பதிவை (enrolment) நிறுத்துமாறு இந்திய பார் கவுன்சிலின் தலைவர் மனன் குமார் மிஸ்ரா பிறப்பித்த உத்தரவு குறித்து வெள்ளிக்கிழமை கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியது.

By admin