ராஜஸ்தான் மாநிலம் ஜோத்வாரா பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், பள்ளி உணவகத்தில் வாங்கிய உணவை சாப்பிட்ட 12-ஆம் வகுப்பு மாணவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்ததை தொடர்ந்து, காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து, பள்ளி நடத்துநர் மற்றும் நிர்வாகியை விசாரணைக்காக கைது செய்துள்ளனர்.
12ஆம் வகுப்பு பள்ளி மாணவர் உயிரிழப்பு
ஜெய்ப்பூரில் உள்ள மகாராணா பிரதாப்பில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் 17 வயது பிரின்ஸ் சோனி என்ற மாணவர் பயின்று வந்துள்ளார்.
சம்பவத்தன்று அந்த மாணவர், 11 மணியளவில் மதிய உணவு இடைவெளியின் போது, பள்ளி உணவகத்தில் இருந்து கட்லெட்டை வாங்கி சாப்பிட்டுள்ளார்.