• Fri. Jul 18th, 2025

24×7 Live News

Apdin News

நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை தடுக்க இந்தியா எடுக்கும் முயற்சிகள் என்ன?

Byadmin

Jul 18, 2025


நிமிஷா பிரியா வழக்கில் இந்தியாவின் பங்கு என்ன? வெளியுறவு அமைச்சகத்தின் விளக்கம்

கடந்த ஜூலை 17 அன்று, இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “கேரள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு ஏமனில் வழங்கப்பட்ட மரண தண்டனை குறித்து சனாவில் உள்ள உள்ளூர் நிர்வாகத்துடன் இந்திய அரசு தொடர்பில் இருப்பதாக” கூறினார்.

சனா ஏமனின் தலைநகரம். நிமிஷா வழக்கில் இந்த பிராந்தியத்துடன் நட்புறவு கொண்ட நாடுகளையும் தொடர்பு கொண்டு வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சனாவில் உள்ள ஹூத்தி நிர்வாகம் தவிர, ஹூத்திகள் மீது செல்வாக்கு செலுத்தும் சௌதி அரேபியா, இரான் மற்றும் அருகிலுள்ள பிற நாடுகளுடனும் இந்தியா தொடர்பில் இருப்பதாக இந்தியாவின் ஆங்கில நாளிதழான ‘தி இந்து’ தெரிவித்துள்ளது.

“இது ஓர் உணர்வுபூர்வமான விஷயம், இதில் இந்திய அரசு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறது. நாங்கள் சட்ட உதவிகளை வழங்கியுள்ளோம். மேலும் நிமிஷா குடும்பத்திற்கு உதவ ஒரு வழக்கறிஞரையும் நியமித்துள்ளோம். இந்த விஷயத்தை தீர்க்க ஏமனின் உள்ளூர் நிர்வாகம் மற்றும் குடும்பத்தினருடன் நாங்கள் தொடர்ந்து பேசி வருகிறோம். நிமிஷாவின் குடும்பத்திற்கு அதிக அவகாசம் அளிக்க நாங்கள் முயல்கிறோம்” என்று ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறினார்.

By admin