• Fri. Jul 18th, 2025

24×7 Live News

Apdin News

நிமிஷா பிரியாவை மரண தண்டனையில் இருந்து காப்பாற்ற உதவும் 8 பேர் யார்?

Byadmin

Jul 18, 2025


நிமிஷா பிரியா, ஏமன், இந்தியா, கேரளா

    • எழுதியவர், சிராஜ்
    • பதவி, பிபிசி தமிழ்

ஏமன் குடிமகன் தலால் அப்தோ மஹ்தி கொலை வழக்கில் இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு, ஜூலை 16-ஆம் தேதி நிறைவேற்றப்பட இருந்த மரண தண்டனை இறுதி நேரத்தில் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த அறிவிப்பு நிமிஷா பிரியாவை மரண தண்டனையிலிருந்து காப்பாற்ற வேண்டும் என போராடி வரும் நிமிஷா பிரியாவின் தாயார் பிரேமா குமாரி, சமூக ஆர்வலர்கள் மற்றும் ‘சேவ் நிமிஷா பிரியா இன்டர்நேஷனல் ஆக்ஷன் கவுன்சில்’ குழுவின் உறுப்பினர்களுக்கு பெரும் ஆறுதலை அளித்துள்ளது.

அதே சமயம், மரண தண்டனை ரத்து செய்யப்படாமல், ஒத்தி மட்டுமே வைக்கப்பட்டுள்ளது என்பதால், மஹ்தி குடும்பத்தின் மன்னிப்பைப் பெற அவர்கள் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்கள்.

இந்த வழக்கில் தொடக்கம் முதல் தற்போது வரை முக்கிய பங்கு வகித்து வரும் நபர்களுடன் பிபிசி தமிழ் பேசியது.

By admin