• Sun. May 31st, 2026

24×7 Live News

Apdin News

“நீ எப்படி இருக்கிறாயோ அப்படியே இரு” – வைபவ் சூர்யவன்ஷிக்கு சச்சின் டெண்டுல்கர் கூறிய அறிவுரை என்ன?

Byadmin

May 31, 2026


வைபவ் சூர்யவன்ஷி, சச்சின் டெண்டுல்கர், கிரிக்கெட், விளையாட்டு, ஐபிஎல் சீசன்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான வைபவ் சூர்யவன்ஷி, ஒரே ஐபிஎல் சீசனில் அதிக சிக்ஸர்களை அடித்து சாதனை படைத்துள்ளார்

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், அண்மைய கிரிக்கெட் உலகின் புதிய நட்சத்திரமாக உருவெடுத்துள்ள வைபவ் சூர்யவன்ஷியை ‘மிகவும் தனித்துவமான சிறப்புமிக்கவர்’ என்று பாராட்டியுள்ளார். மேலும், “யாரும் அவருடைய இயல்பான ஆட்ட பாணியில் யாரும் தலையிடக்கூடாது” என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சூர்யவன்ஷி, நடப்பு ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி அசாத்தியமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரது அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறவில்லை என்றாலும், இந்த இடதுகை தொடக்க ஆட்டக்காரர் தனது அதிரடி பேட்டிங் மூலம் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் மனங்களையும் ஈர்த்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய அவர், 237-க்கும் அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டுடன் மொத்தம் 776 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார்.

குறிப்பாக, இந்த சீசனில் மட்டும் சூர்யவன்ஷி 72 சிக்ஸர்களை விளாசி, மேற்கிந்தியத் தீவுகள் அணியின் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் ஒரு ஐபிஎல் சீசனில் அதிக சிக்ஸர்கள் (59 சிக்ஸர்கள்) அடித்திருந்த சாதனையை முறியடித்து, புதிய வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார்.

இதற்கிடையில், ‘மாஸ்டர் பிளாஸ்டர்’ சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், 15 வயதான வைபவ்வின் இந்த அசாத்தியமான ஆட்டத்திறனை வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.

By admin