• Fri. Aug 28th, 2026

24×7 Live News

Apdin News

நேபாள வெள்ளத்தில் தமிழர் கடைசி நொடியில் உயிர் தப்பியது எப்படி? நேரில் கண்டது என்ன?

Byadmin

Aug 28, 2026


வெள்ள பாதிப்பை ஒட்டி பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் அழைத்து வரும் மீட்புப்படையினர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வெள்ள பாதிப்பை ஒட்டி பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் அழைத்து வரும் மீட்புப்படையினர்.

    • எழுதியவர், ப.சிவசங்கர்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

“முன்னால் சென்ற பேருந்தை சுமார் 40 அடி உயரத்திற்கு எழுந்த சகதி மூடியது” என்று தமிழ்நாட்டில் இருந்து ஆன்மீகப் பயணம் மேற்கொண்ட திருச்சியைச் சேர்ந்த கற்பகம் கூறினார்.

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட பல சுற்றுலாப் பயணிகள் சிக்கிக்கொண்டனர்.

தமிழ்நாட்டில் இருந்து கைலாஷ் மானசரோவர் பயணம் மேற்கொண்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்களில் 21 பேர் நேபாளத்தில் பாதுகாப்பாக இருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதோடு, மீட்கப்பட்ட தமிழர்களின் பட்டியலையும் வெளியிட்டது.

அரசு வெளியிட்ட பட்டியலில் இடம்பெற்றிருந்தவர்களில் சிலரை பிபிசி தமிழ் தொடர்புகொண்டது. வெள்ளப் பாதிப்பை நேரில் பார்த்தவர்கள் கூறிய கருத்துகளை இங்கே தொகுத்துள்ளோம்.

நேபாளம் வெள்ள பாதிப்பு

குடியிருப்புகளை கடுமையாக பாதித்திருக்கும் வெள்ள பாதிப்பின் காட்சி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, குடியிருப்புகளை கடுமையாக பாதித்திருக்கும் வெள்ள பாதிப்பின் காட்சி

நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் உள்ள போட்டேகோஷி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300-ஐ கடந்துள்ளது. மேலும் பலரைத் தொடர்புகொள்ள முடியாத நிலை இருப்பதால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுவதாக நேபாள அரசு தெரிவித்துள்ளது.

By admin