• Tue. Sep 8th, 2026

24×7 Live News

Apdin News

நேபாள வெள்ளம்: காணாமல் போன தமிழர்களை டிஎன்ஏ பொருத்தம் மூலம் எவ்வாறு அடையாளம் காண்பர்?

Byadmin

Sep 8, 2026


நேபாள பெருவெள்ளம், தமிழ்நாடு, டிஎன்ஏ மாதிரிகள், தஞ்சாவூர்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ரா. ஆனந்த்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி ஏற்பட்ட நேபாள பெருவெள்ளத்தில் இதுவரை 1300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், சுமார் 4900 பேர் காணாமல் போயுள்ளனர். காணாமல் போனவர்களில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினரும் அடங்குவர்.

நேபாள பெரு வெள்ளத்தில், “தமிழகத்தைச் சேர்ந்த 305 பேர் சிக்கியிருந்தனர் என்றும், அவர்களில் 220 பேர் மீட்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 85 பேர் குறித்த தகவல் கிடைக்கவில்லை” என்றும் தமிழக அரசு தெரிவித்திருந்தது.

இந்த பேரிடரில், ‘உயிரிழந்தவர்களின் உடல்கள் பல நாட்கள் நீரிலும், சேற்றிலும் மூழ்கிக் கிடந்து, பின்னர் கண்டெடுக்கப்படுவதால், அவை சிதைந்து, அடையாளம் காண இயலாத நிலையில் உள்ளன. அவற்றை பாதுகாத்து வைப்பதிலும் இருக்கும் நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக, அவற்றை தற்காலிகமாக புதைக்கும் நடவடிக்கையில் இறங்கியிருப்பதாக’ நேபாள அரசு அறிவித்திருந்தது.

அவ்வாறு ‘அந்த உடல்கள் புதைக்கப்படுவதற்கு முன்பாக, அவற்றிலிருந்து டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பாதுகாக்கப்படும். காணாமல் போனவர்களின் நெருங்கிய உறவினர்களிடமிருந்து சேகரிக்கப்படும் டிஎன்ஏ மாதிரிகளுடன் அவை பொருந்திப்போகும் பட்சத்தில், அந்த உடல்கள் சடங்குகளுக்காக உறவினர்களிடம் ஒப்படைக்கப்படலாம்’ என்றும் நேபாள அரசு தெரிவித்திருந்தது.

அதைத் தொடர்ந்து மீட்கப்பட்ட அடையாளம் தெரியாத உடல்கள் அல்லது உடல் பாகங்களுடன் காணாமல் போனவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு டிஎன்ஏ பொருத்தம் உள்ளதா என்பதை அறிய, உயிரியல் ரீதியாக நெருக்கமான உறவினர்களிடம் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன.

By admin