• Thu. Jul 31st, 2025

24×7 Live News

Apdin News

பனையோலை வேலி | எஸ்.பி.லக்குணா சுஜய்

Byadmin

Jul 30, 2025


பனைமர ஓலையிலே
வேலியொன்று நான் அடைச்சேன்
வீட்டுக் காணிக்குள்ளே
ஒரு கோழி கூட வாராது பாதுகாத்தேன்

பனையோலை வேலி
பலகாலம் நிலைத்திருக்கும்
செம்மண் அழகிலே
தூசியெங்கும் படர்ந்திருக்கும்

வடக்கு நிலப்பரப்பெங்கும்
பனையோலை வேலியே
அழகழகாய் பூத்திருக்கும்
அவரவர் விருப்பம் போல்
அணிவகுக்கும்

பனையோலை வேலிக்கென்று
ஒரு கூட்டம் வேலைக்கு இருந்தது
வேலி அழகாகவும் இருந்தது
வேலை நிறைவாகவும் இருந்தது

பனையோலை வேலி இப்போ
அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கிறது
தகர வேலி யாகவும்
மதில் வேலியாக மாறிவிட்டது

பழையதை எல்லாவற்றையும் மறந்திட்டு
நினைவுகளை மட்டும் இப்போ.
நெஞ்சில்
சுமந்து கொண்டிருக்கிறோம் .

வட்டக்கச்சி
எஸ்.பி.லக்குணா சுஜய்.

By admin