• Wed. Aug 19th, 2026

24×7 Live News

Apdin News

பாகிஸ்தானில் இந்தியக் கொடி படத்துடன் ‘ஜெய் ஹிந்த்’ என பதிவிட்ட 2 பேருக்கு என்ன நேர்ந்தது?

Byadmin

Aug 19, 2026


இந்திய தேசியக் கொடி, பாகிஸ்தானில் இருவர் கைது

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், பிலால் அகமது
    • பதவி, பிபிசி உருது
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

பாகிஸ்தானின் மொஹ்மந்த் மாவட்டத்தில், இந்தியாவின் சுதந்திர தினத்தன்று சமூக ஊடகங்களில் இந்திய தேசியக் கொடியின் படத்தையும் ‘ஜெய் ஹிந்த்’ என்ற வார்த்தைகளையும் பகிர்ந்ததாக இருவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

பிபிசி உருதுவுக்குக் கிடைத்த முதல் தகவல் அறிக்கையின்படி, குற்றம் சுமத்தப்பட்டவர்கள் பாகிஸ்தான் தண்டனைச் சட்டத்தின் 123ஏ மற்றும் 153ஏ ஆகிய பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தப் பிரிவுகள், நாட்டின் இறையாண்மைக்கு எதிராகச் செயல்படுதல் மற்றும் தூண்டுவிடுதல் தொடர்பானவை ஆகும்.

மொஹ்மந்த் மாவட்டத்தின் கலானை பகுதி காவல் நிலைய அதிகாரி முராத் கான் பிபிசி உருதுவிடம், “இரண்டு நபர்கள், ஆகஸ்ட் 15 அன்று இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டுத் தங்களது சமூக ஊடகப் பக்கங்களில் இந்தியக் கொடியின் படம் மற்றும் ‘ஜெய் ஹிந்த்’ என்ற முழக்கத்தைப் பதிவிட்டனர்.” என்று தெரிவித்தார்.

அதன் பின்னர் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து அவர்களை கைது செய்ததாகவும் அவர் கூறினார்.

ஆகஸ்ட் 15 அன்று கைது செய்யப்பட்ட பின்னர், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாகவும், அவர்கள் இருவரும் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

By admin