• Sat. Jul 26th, 2025

24×7 Live News

Apdin News

பாகிஸ்தானில் சிங்கம், புலிகளை வளர்த்து, விற்க தனி பண்ணை – வனத்துறை சோதனையில் என்ன நடந்தது?

Byadmin

Jul 26, 2025


தனியாரிடமிருந்து மீட்கப்பட்ட சிங்கங்கள் மிருகக்காட்சி சாலையில் வைக்கப்பட்டிருக்கும் காட்சி
படக்குறிப்பு, மீட்கப்பட்ட சிங்கக் குட்டிகள், லாகூரில் உள்ள சஃபாரி உயிரியல் பூங்காவில் மருத்துவ பரிசோதனைகளுக்காக தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன

பாகிஸ்தானின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான லாகூரின் புறநகர்ப் பகுதியில் இருக்கிறது அந்தப் பண்ணை வீடு. அங்கு ஏதோ வித்தியாசமாக இருக்கிறது என்பதை காற்றில் வரும் வாசனையே உணர்த்துகிறது.

அதன் உள்ளே சென்றதுமே, வாசனைக்கான காரணம் தெளிவாகிறது. ஃபயாஸ் என்பவருக்குச் சொந்தமான அந்த இடத்தில் 26 சிங்கங்கள், புலிகள் மற்றும் அவற்றின் குட்டிகள் இருந்தன.

அந்த இடத்தில், மழை காரணமாக, தரை முழுக்க சேறாகி இருப்பதாகவும், மற்றபடி அந்த விலங்குகள் “அங்கு மகிழ்ச்சியாக” இருப்பதாகவும் அவர் வலியுறுத்துகிறார். “எங்களைப் பார்க்கும்போது அவை அருகே வருகின்றன, சாப்பிடுகின்றன. அவை முரட்டுத்தனமாக இல்லை” என்றும் அவர் தெரிவித்தார்.

அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, ஒரு சிங்கம் கர்ஜித்தது. அதைச் சுட்டிக்காட்டிப் பேசிய ஃபயாஸ், “அது சற்று முரட்டுத்தனமானது, அதன் இயல்பே அப்படித்தான்,” என்றார்.

By admin