• Wed. Jul 30th, 2025

24×7 Live News

Apdin News

பாகிஸ்தான் உடனான சண்டை நிறுத்தத்துக்கு முன் அமெரிக்க துணை அதிபருடன் பேசியது என்ன? – மோதி விளக்கம்

Byadmin

Jul 29, 2025


நாடாளுமன்றத்தில் பஹல்காம் விவாதம்

பட மூலாதாரம், SANSAD TV

பாகிஸ்தான் உடனான மோதலின்போது அமெரிக்க துணை அதிபர் ஜே டி வான்ஸ் உடன் மே 9-ம் தேதி இரவு நடைபெற்ற உரையாடல் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோதி இன்று தெரிவித்தார்.

முன்னதாக பஹல்காம் தாக்குதல் குறித்த விவாதத்தில் பேசியிருந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஜே டி வான்ஸ் உடனான உரையாடல் குறித்து கேள்வி எழுப்பியிருந்தனர்.

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பேசும் போது, இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தவுள்ளதாக அமெரிக்க துணை அதிபர் அழைத்து தெரிவித்தார் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் கூறுகிறார், இந்தியா என்ன செய்துக் கொண்டிருந்தது என்று பேசியிருந்தார்.

செவ்வாய்கிழமை மாலை அவையில் பேசிய பிரதமர் மோதி, ” மே 9-ம் தேதி இரவு அமெரிக்க துணை அதிபர் ஒரு மணி நேரமாக என்னை தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். நான் பிறகு அவரை அழைத்து, மூன்று நான்கு முறை நீங்கள் அழைத்துள்ளீர்களே என்றேன். அப்போது அவர் பாகிஸ்தான் ஒரு பெரிய தாக்குதலை நடத்தவுள்ளதாக கூறினார். பாகிஸ்தானுக்கு அந்த எண்ணம் இருந்தால், அவர்கள் அதற்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும், நாங்கள் இன்னும் பெரிய தாக்குதலை நடத்துவோம் என்று பதில் அளித்தேன்” என்று தெரிவித்தார்.

By admin