• Wed. Jul 9th, 2025

24×7 Live News

Apdin News

பிகார்: 5 பேர் உயிரோடு எரித்துக் கொலை – சூனியக்காரர்கள் எனக்கூறி கொல்லப்பட்டதாக காவல்துறை தகவல்

Byadmin

Jul 9, 2025


பூர்னியா மாவட்டத்தில் உள்ள டெட்காமா கிராமம்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, பூர்னியா மாவட்டத்தில் உள்ள டெட்காமா கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் கொல்லப்பட்டனர்

பிகாரின் பூர்னியா மாவட்டத்தில் உள்ள டெட்காமா கிராமத்தில் ஒரே குடும்பத்தை ஐந்து பேர் சூனியக்காரர்கள் என குற்றம்சாட்டப்பட்டு கொல்லப்பட்டதாக காவல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பூர்னியா காவல்துறையின் கூற்றின்படி, உயிரிழந்தவர்களில் பாபுலால் ஓரான் அவரது மனைவி உட்பட அவரது குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் ஜூலை 6ஆம் தேதி ஞாயிறன்று நடைபெற்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த வழக்கில் முக்கிய குற்றம்சாட்டப்பட்டவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பூர்னியா மாவட்ட ஆட்சியர் அன்சுல் குமார் தெரிவித்தார்.

இந்த சம்பவத்திற்கு பிறகு, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து பிகார் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் மற்றும் பூர்னியாவை சேர்ந்த சுயேட்சை எம்பி பப்பு யாதவ் ஆகியோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

By admin