• Sun. Jul 27th, 2025

24×7 Live News

Apdin News

பிரிட்டன் உடனான வர்த்தக ஒப்பந்தம் மூலம் இந்தியாவுக்கு என்ன லாபம்?

Byadmin

Jul 26, 2025


பிரதமர் நரேந்திர மோதி - பிரிட்டிஷ் பிரதமர் கியர் ஸ்டாமர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிரதமர் நரேந்திர மோதி மற்றும் பிரிட்டிஷ் பிரதமர் கியர் ஸ்டாமர்

    • எழுதியவர், பிரவீன்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

இந்திய பிரதமர் நரேந்திர மோதியும், பிரிட்டிஷ் பிரதமர் கியர் ஸ்டாமரும் ஆறு பில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் ஜூலை 24ஆம் தேதி கையெழுத்திட்டனர்.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், பிரிட்டிஷ் கார்கள் மற்றும் விஸ்கி இந்தியாவில் மலிவாகக் கிடைக்கும். இந்திய உடைகளும் ஆபரணங்களும் பிரிட்டனில் மலிவாகக் கிடைக்கும். இந்தியாவும் பிரிட்டனும் இந்த வர்த்தக ஒப்பந்தத்தால் பயனடையும் என நம்புகின்றன.

ஆனால் இந்த ஒப்பந்தத்தால் யார் அதிக லாபம் அடைவார்கள் என்பதுதான் தற்போது எழுகின்ற கேள்வி.

பிரிட்டன் உடனான வர்த்தக ஒப்பந்தத்தைப் பாராட்டிய பிரதமர் மோதி, இந்த ஒப்பந்தத்தின் உதவியுடன், இந்தியாவின் ஆடைகள், காலணிகள், நகைகள், கடல் உணவுகள் மற்றும் பொறியியல் தொடர்பான பொருட்களை பிரிட்டிஷ் சந்தையில் எளிதாகப் பெற முடியும் என்று கூறியுள்ளார்.

By admin