• Mon. Jun 8th, 2026

24×7 Live News

Apdin News

பிரெஞ்சு ஓபன்: தனது முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றார் அலெக்சாண்டர் ஸ்வரேவ்

Byadmin

Jun 8, 2026


பாரிஸ் நகரில் நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் இத்தாலியின் ஃபிளாவியோ கோபோலியை ஒரு பரபரப்பான ஐந்து செட் ஆட்டத்தில் வீழ்த்தி, அலெக்சாண்டர் ஸ்வர்வ் தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார்.

பிலிப் சாட்ரியர் மைதானத்தில் நான்கு மணி நேரம் 16 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், 6-1, 4-6, 6-4, 6-7 (5/7), 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றதன் மூலம், இரண்டாம் நிலை வீரரான ஸ்வரேவ், 1996 ஆஸ்திரேலிய ஓபனில் போரிஸ் பெக்கருக்கு பிறகு ஒரு முக்கிய போட்டியை வென்ற முதல் ஜெர்மானிய வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

தனது விளையாட்டு வாழ்க்கையில் சில மனதை நொறுக்கும் தோல்விகளுக்குப் பிறகு, இது ஸ்வெரெவின் நான்காவது கிராண்ட் ஸ்லாம் இறுதி போட்டியாகவும், ரோலண்ட் கரோஸில் இரண்டாவது போட்டியாகவும் அமைந்தது.

பத்தாவது தரவரிசையில் இருந்த கோபோலி, 50 ஆண்டுகளில் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்ற முதல் இத்தாலிய ஆண் வீரர் என்ற பெருமையைப் பெற முயன்றார். ஆட்டத்தின் பல்வேறு கட்டங்களில் இரு வீரர்களும் பதற்றத்துடன் காணப்பட்டனர், குறிப்பாக தவறுகள் நிறைந்த முதல் செட்டின் போது கோபோலி அவ்வாறு உணர்ந்தார்.

ஆனால், ஆட்டத்தின் டிசைடர் செட்டில், ஸ்வரேவின் மிகுந்த அனுபவம் வெளிப்பட்டது, அவர் வெற்றி பெற்றார்.

நடப்பு சாம்பியனான கார்லோஸ் அல்காரஸ் காயம் காரணமாக பங்கேற்காததாலும், ஜானிக் சின்னர் மற்றும் நோவாக் ஜோகோவிச் எதிர்பாராத விதமாக முன்கூட்டியே வெளியேறியதாலும், 29 வயதான அவருக்கு தனது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை கைப்பற்ற ஒரு பொன்னான வாய்ப்பு கிடைத்தது.

ஸ்வெரெவ் இதற்கு முன்னர் தனது மூன்று இறுதி போட்டி தோல்விகளுடன், ஆறு கிராண்ட் ஸ்லாம் காலிறுதி போட்டிகளிலும் ஏழு அரையிறுதி போட்டிகளிலும் தோல்வி அடைந்திருந்தார்.

By admin