• Mon. Jun 8th, 2026

24×7 Live News

Apdin News

இலங்கையை ஆக்கிரமிக்கும் சர்வதேச சைபர் மாஃபியா கும்பல்கள் – என்ன நடக்கிறது?

Byadmin

Jun 8, 2026


இலங்கையை ஆக்கிரமிக்கும் சர்வதேச சைபர் மாஃபியா கும்பல்கள் – என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ராஜகோபால் யசிஹரன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

இலங்கையின் தெற்குக் கடற்கரையோர சொகுசு பங்களா ஒன்றின் கதவுகள் எப்போதும் பூட்டப்பட்டே இருந்தன. உள்ளே 24 மணிநேரமும் குளிரூட்டி இயங்கியதுடன், நள்ளிரவிலும் கணினித் திரைகளின் வெளிச்சம் அறைகளை நிறைத்திருந்தது. அங்கு தங்கியிருந்த வெளிநாட்டுப் பிரஜைகள் எவரும் சுற்றுலாத் தலங்களை ரசிக்க வெளியே வரவில்லை.

“மாதத்திற்கு ஐந்து லட்சம் ரூபாய் வாடகை தருகிறோம் என்று முன்பணத்துடன் வந்தபோது எனக்கு எந்தச் சந்தேகமும் வரவில்லை,” என்கிறார் இலங்கையின் தென்பகுதியில் தனது சொகுசு பங்களாவை வெளிநாட்டவர்களுக்கு வாடகைக்கு விட்ட வீட்டு உரிமையாளர் ஒருவர். பாதுகாப்புக் காரணங்களுக்காகத் தனது பெயரை வெளிப்படுத்த விரும்பாத அவர், பிபிசி தமிழிடம் தனது அதிர்ச்சியைப் பகிர்ந்துகொண்டார்:

“சுற்றுலாப் பயணிகள் என்றுதான் கூறினார்கள். ஆனால், காவல்துறையினர் எனது வீட்டைச் சோதனையிட்டபோதுதான், உலகளாவிய இணையதள மோசடி வலையமைப்பு ஒன்று எனது வீட்டிற்குள் இயங்கிய அதிர்ச்சி உண்மை எனக்குத் தெரிந்தது. இப்போது விசாரணை, நீதிமன்றம் என்று எனது குடும்பமே அச்சத்தில் உள்ளது” என்கிறார் அவர்.

இது ஏதோ ஒரு தனிப்பட்ட வீட்டின் கதையல்ல. இலங்கை தற்போது முன்னெப்போதும் இல்லாத வகையில் சர்வதேச சைபர் குற்றச் செயல்களின் பாரிய அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது என்பதற்கான நேரடிச் சான்று.

ஆயிரம் பேர் கைது

ஆசியாவின் பிற பகுதிகளில் இருந்து விரட்டப்பட்ட அதிநெருக்கடி மிக்க இணைய மோசடிக் கும்பல்கள், இலங்கையைத் தங்களின் முதன்மைச் செயல்பாட்டுத் தளமாக மாற்றி வருவதாக விசாரணை அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

By admin