பஸ்களின் பதுக்கல் அறைகள் மற்றும் பார்சல் மூட்டைகள், போதைப் பொருள் ஏதேனும் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என்பதை ‘மேக்ஸ்’ மோப்பம் பிடித்து துல்லியமாக ஆய்வு செய்தது.
விடிய விடிய நடைபெற்ற இந்த அதிரடி சோதனையில், சுமார் 60-க்கும் மேற்பட்ட சொகுசு ஆம்னி மற்றும் வால்வோ பேருந்துகளும், 25-க்கும் மேற்பட்ட பார்சல் லாரிகள் மற்றும் வேன்களும் அக்குவேர் ஆணிவேராக சோதனை செய்யப்பட்டன.
கோவை மாவட்டம் மற்றும் மாநகர பகுதிகளில் வெளிமாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ரெயில்கள், பஸ்கள், லாரிகள், பார்சல் சர்வீஸ், கார்கள், ஆட்டோக்கள் போன்ற வாகனங்களில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வரப்படுவதை தடுக்க மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி ஆகியோர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட போலீசாருக்கு உத்தரவிட்டு உள்ளனர்.