• Sat. Sep 21st, 2024

24×7 Live News

Apdin News

பிரேமதாஸவின் மகனிடம் நாட்டைக் கையளியுங்கள்!- சஜித் வேண்டுகோள்

Byadmin

Sep 14, 2024


முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் மகனிடம் நாட்டைக் கையளியுங்கள் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

தனது ஆட்சியில் தேயிலை தொழில்துறையின் பொற்காலம் உருவாக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் வெற்றிக்காக ஏற்பாடு செய்யப்பட்ட பத்தேகம பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அச்சமின்றி, இந்த நாட்டின் எதிர்காலத்தைப் பிரேமதாஸவின் மகனிடமும், இந்த அணியிடமும் ஒப்படைக்கவும். நாட்டுக்குத் தற்காலிக பொறுப்பைக் கொடுங்கள். வளர்ச்சியடைந்த சகாப்தத்தை உருவாக்குவோம்.” – என்றார்.

The post பிரேமதாஸவின் மகனிடம் நாட்டைக் கையளியுங்கள்!- சஜித் வேண்டுகோள் appeared first on Vanakkam London.

By admin