த.வெ.க.வுக்கு காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவும் கிடைத்துள்ளது. இதனால் தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் த.வெ.க. போட்டியிடும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
இந்த இடைத்தேர்தலை குறிவைத்து புதுவையை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பலர் த.வெ.க.வில் இணைய ஆர்வம் காட்டி வருகின்றனர். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், அரசியல் கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் த.வெ.க.வுக்கு தாவ தயாராகி வருகின்றனர்.
இன்றைய தினம் சென்னை பனையூரில் அமைச்சர் புஸ்சி ஆனந்தை சந்தித்து அதிமுக பிரமுகரான சுத்துக்கேணி பாஸ்கர் த.வெ.க.வில் இணைந்துள்ளார். அவரும் தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் ஆர்வத்தில்தான் இணைந்திருப்பதாக தெரிகிறது.
இதனிடையே ஏற்கனவே புதுவை சட்டசபை தேர்தலில் த.வெ.க. சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த சிலரும் தங்களுக்கு தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு வருகின்றனர். காங்கிரசும் இடைத்தேர்தலில் போட்டியிட திட்டமிட்டு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.