• Sat. Jun 6th, 2026

24×7 Live News

Apdin News

டெல்லி ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா கட்சி போராட்டம் – என்ன நடக்கிறது? நேரலை

Byadmin

Jun 6, 2026


சிஜேபி, அபிஜித் திப்கே, டெல்லி ஜந்தர் மந்தர்,

பட மூலாதாரம், Getty Images

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய காக்ரோச் ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கே, டெல்லி ஜந்தர்மந்தரில் திரண்டுள்ள இளைஞர்களுடன் போராட்டத்தில் இணைந்துள்ளார். ஜந்தர் மந்தரில் அவர், தனது ஆதரவாளர்களுடன் இணைந்து முழக்கங்களை எழுப்பினார்.

அத்துடன் அபிஜித் தீப்கே, “கடந்த 5-10 நாட்களாக, சமூக ஊடகங்களில் ஒரு பக்கத்தை (page) நடத்துவதால் என்ன பயன் என்று மக்கள் என்னிடம் கேட்டு வருகின்றனர். கேமராவைத் திருப்பி, வீடுகளிலிருந்து எத்தனை கரப்பான் பூச்சிகள் வெளியே வந்துள்ளன என்பதை அவர்களுக்குக் காட்டுங்கள்,” என்று கூறினார்.

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ (CJP), மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. இப்போராட்டத்தை “அன்புடனும் அமைதியுடனும் முன்னெடுத்துச் செல்லுமாறு” அக்கட்சி தனது ஆதரவாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

முன்னதாக, டெல்லியில் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்திறங்கிய உடனேயே, “கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்” என்று அபிஜித் தீப்கே வலியுறுத்தியிருந்தார்.

ஷார்ட் வீடியோ

காணொளிக் குறிப்பு, அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்த காக்ரோஜ் ஜனதா கட்சி நிறுவனர்

ஜந்தர்மந்தரில் என்ன நடக்கிறது?

லடாக்கைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரும் கல்வியாளருமான சோனம் வாங்சுக், சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே விமான நிலையத்தில் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

By admin