• Thu. Jul 17th, 2025

24×7 Live News

Apdin News

புழல் சிறையில் வெளிநாட்டுப் பெண் கைதிகளால் சிறைக் காவலர்களுக்கு அச்சுறுத்தலா? உண்மை என்ன?

Byadmin

Jul 17, 2025


புழல் சிறையில் பெண் காவலர் மீது நைஜீரிய கைதி தாக்குதலில் நடந்தது என்ன? சிறை நிலவரம் என்ன?

    • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
    • பதவி, பிபிசி தமிழ்

சென்னை புழல் பெண்கள் சிறையில் இரண்டாம் நிலைக் காவலரை கொடூரமாகத் தாக்கிய புகாரில், நைஜீரியாவை சேர்ந்த பெண் கைதி மீது மூன்று பிரிவுகளில் காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

“என்னை அடிப்பதைப் பார்த்து இரண்டு கைதிகள் மயக்கம் போட்டு விழுந்துவிட்டனர். வெளிநாட்டுக் கைதிகளால் சிறையில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை. நாங்கள்தான் சிறைவாசி போல வாழ்கிறோம்” எனக் கூறுகிறார், புழல் பெண்கள் சிறையின் இரண்டாம் நிலைக் காவலர் சரஸ்வதி.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை சிறைத் துறை நிர்வாகம் மறுத்துள்ளது.

சென்னையை அடுத்துள்ள புழலில் மத்திய சிறை செயல்பட்டு வருகிறது. இங்கு பெண்கள் தனிச் சிறையில் சுமார் 260க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர 40க்கும் மேற்பட்ட வெளிநாட்டுக் கைதிகள் உள்ளனர்.

By admin