டிக்சன் ஃப்யோர்டு பகுதியில் நிலச் சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் ஒரு பனிப்பாறை சரிந்து விழுந்து 200 மீட்டர் அளவிற்கு அலை எழுவதை தூண்டியது. குறுகலான ஃப்யோர்டு பகுதியில் இந்த அலை சிக்கிக்கொண்டு, ஒன்பது நாட்களுக்கு முன்னும் பின்னுமாக நகர்ந்து நில அதிர்வுகளை ஏற்படுத்தியது. காலநிலை மாற்றம் காரணமாக கிரீன்லாந்தில் உள்ள பனிப்பாறை மலைகள் உருகுகின்றன. இதனால் இது போன்ற நிலச்சரிவுகள் அடிக்கடி நிகழ்கின்றன என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.