• Fri. Jun 6th, 2025

24×7 Live News

Apdin News

பெங்களூரு கூட்ட நெரிசலில் சிக்கியவர்கள் கூறியது என்ன? ஆர்சிபி கொண்டாட்டத்தில் என்ன நடந்தது?

Byadmin

Jun 5, 2025


பெங்களூரு கூட்ட நெரிசல், ஆர்சிபி பாராட்டு விழா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பெங்களூருவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த நபர்களை கர்நாடக முதல்வர் சித்தராமையா நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

பெங்களூருவில் ஜூன் 4-ஆம் தேதி நடைபெற்ற ஆர் சி பி அணியின் வெற்றிக் கொண்டாடத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர், 33 பேர் காயமடைந்துள்ளனர்.

இதில் பங்கேற்றவர்களில் சிலர் ரசிகர்கள், சிலர் ஒரு குதூகலத்துக்காக சென்றிருந்தவர்கள். ரசிகர்கள், ரசிகர்கள் அல்லாதவர்கள் – இரு தரப்பினருமே இந்த சம்பவத்தில் பலியாகியுள்ளனர். ஒரு சந்தோசமான தருணமாக இருந்திருக்க வேண்டியது, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மட்டுமல்லாமல் பிறருக்கும் மிகவும் துயர் மிகுந்ததாக மாறிவிட்டது.

ஷாமிலி என்ற இளம்பெண், தனது சகோதரி மற்றும் நண்பர்கள் உடன் வெற்றிக் கொண்டாட்டத்தை காண சென்றிருந்தார். “நான் கிரிக்கெட் ரசிகை அல்ல, நிகழ்வை காணும் ஆர்வத்தில் சென்றேன்”. ஆனால் அவர் பிறகு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட வேண்டியிருந்தது.

“கூட்டம் அதிகரித்த போது, கிளம்பிவிடலாம் என்று நான் கூறிக்கொண்டே இருந்தேன். கூட்டத்தில் முன்னும் பின்னும் தள்ளிக் கொண்டே இருந்தனர். திடீரென நான் தரையில் விழுந்திருப்பதை உணர்ந்தேன். கூட்டத்தில் மிதிபட்டேன். நான் சாகப் போகிறேன் என்றே நினைத்தேன்” என்று மருத்துவமனையில் இருந்த அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

By admin