• Thu. Jul 3rd, 2025

24×7 Live News

Apdin News

போர்டோ நோவா: பரங்கிப்பேட்டை போர் ஹைதர் அலி வீழ்ச்சிக்கும் ஆங்கிலேயரின் எழுச்சிக்கு வித்திட்டது எப்படி?

Byadmin

Jul 3, 2025


ஹைதர் அலி, திப்பு சுல்தான், மைசூர், போர்டோ நோவா போர், பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனம், மராட்டியர்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஹைதர் அலி

இந்திய வரலாற்றில், 1781ஆம் ஆண்டில் நடைபெற்ற போர்டோ நோவா போருக்கு (Battle of Porto Novo) ஒரு முக்கியப் பங்கு உண்டு. இந்த போர்டோ நோவா என்ற கடற்கரையோரப் பகுதிதான், இப்போது கடலூர் மாவட்டத்தின் ‘பரங்கிப்பேட்டை’ என அழைக்கப்படுகிறது.

1767 முதல் 1799 வரையிலான காலகட்டத்தில், பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தின் படைகளுக்கும், மைசூரின் ஆட்சியாளர்களுக்கும் இடையே ‘ஆங்கிலேய- மைசூர் போர்கள்’ எனும் தொடர் போர்கள் நான்கு முறை நடைபெற்றன. அதில் ஒரு பகுதியே இந்த போர்டோ நோவா போர். ஹைதர் அலியின் வீழ்ச்சியையும், தென்னிந்தியாவில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தின் எழுச்சியையும் போர்டோ நோவா போர் குறித்தது என்றே கூறலாம்.

“பதினெட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதி இந்தியாவில் குழப்பமான காலமாக இருந்தது. முகலாயர்கள், மராட்டியர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் என மூன்று தரப்புகளின் மோதலை அது கண்டது. அந்த காலகட்டத்தில் முகலாய சக்தி வீழ்ச்சியடைந்து கொண்டிருந்தது, மராட்டியர்களின் சக்தி உச்சத்தில் இருந்தது, ஐரோப்பியர்கள் அப்போதுதான் முன்னேறிக் கொண்டிருந்தனர். இந்தியாவில் தங்களுக்கான ராஜ்யங்களை உருவாக்க விரும்பியவர்களுக்கு இந்தக் காலகட்டம் ஒரு சிறந்த வாய்ப்பை வழங்கியது.” என்று ‘பிரிட்டிஷ் ரிலேஷன்ஸ் வித் ஹைதர் அலி’ எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார் மறைந்த வரலாற்றிசிரியரான ஷேக் அலி.

இத்தகைய காலகட்டத்தில்தான் ஹைதர் அலி, கொஞ்சம் கொஞ்சமாக, ஒரு தவிர்க்க முடியாத ‘சுல்தானாக’ வளர்ந்து வந்தார்.

By admin