மூன்று நாடுகள் பரிசீலனை:
ஜூலை மாதம் நடைபெற்ற வருடாந்திர கூட்டத்தில், இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகம் குறித்து ஐ.சி.சி. வாரியம் கவலை தெரிவித்திருந்தது. திருத்தப்பட்ட அரசியலமைப்பை ஏற்றுக்கொள்வதில் இலங்கை கிரிக்கெட் வாரியம் முன்னேற்றம் கண்டு வருவதாக குறிப்பிட்ட அதே வேளையில், விரைவில் தேர்தல்களை நடத்த வேண்டியதன் அவசியத்தையும் ஐ.சி.சி. வலியுறுத்தியது. மேலும், தற்காலிகமாக ஐ.சி.சி. வாரியக் கூட்டங்களில் இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் பிரதிநிதித்துவம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
மாற்று நடத்துநர்களாக பரிசீலிக்கப்பட்ட வங்கதேசம், இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளை, ஐ.சி.சி.யின் நிர்ணயிக்கப்பட்ட மதிப்பீட்டு அளவுகோல்களின்படி ஆய்வு செய்த பிறகு இந்தியா பரிந்துரைக்கப்பட்டது. இந்த முடிவு பின்னர் ஐ.சி.சி. வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்டது.
2025 மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையை நடத்திய பிறகு, மற்றொரு முக்கிய மகளிர் கிரிக்கெட் தொடரை நடத்தும் வாய்ப்பு இதன் மூலம் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. ஆண்டுதோறும் ஒரு முக்கிய மகளிர் கிரிக்கெட் தொடரை நடத்த வேண்டும் என்ற ஐ.சி.சி. முயற்சியின் ஒரு பகுதியாக இந்த சாம்பியன்ஸ் கோப்பை அமைவதுடன், மகளிர் கிரிக்கெட் காலண்டரில் மற்றொரு முக்கிய போட்டியாகவும் இது இணைகிறது.