• Fri. Jun 26th, 2026

24×7 Live News

Apdin News

மகளிர் டி20 உலகக்கோப்பை: இந்திய அணி அரையிறுதிக்கு செல்வது ஏன் எளிதானது இல்லை?

Byadmin

Jun 26, 2026


இந்திய அணி குரூப் சுற்றில் ஆறு புள்ளிகளைப் பெற்றுள்ளது.

பட மூலாதாரம், Philip Brown/Getty Images

படக்குறிப்பு, இந்திய அணி குரூப் சுற்றில் ஆறு புள்ளிகளைப் பெற்றுள்ளது (கோப்புப் படம்)

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரில், வியாழக்கிழமை வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அரையிறுதிக்கு முன்னேறும் அணியின் வாய்ப்பு வலுப்பெற்றுள்ளது.

இருப்பினும், இதைத் தாண்டி அரையிறுதிக்குச் செல்லும் பாதை எளிதானதாக இல்லை.

உண்மையில், குரூப்-ஏ பிரிவில் இந்தியா தற்போது ஆறு புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலிய அணி நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று எட்டு புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.

அதே நேரத்தில், நெதர்லாந்துக்கு எதிராகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ள தென்னாப்பிரிக்கா, தனது நிகர ரன்ரேட்டை மேம்படுத்தியுள்ளது. அதுவும் ஆறு புள்ளிகளுடன் இந்தியாவுக்குப் போட்டியாக உள்ளது. தென்னாப்பிரிக்க அணி குரூப் பிரிவில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

இரு அணிகளும் வெற்றி பெற்றுள்ளதால், அரையிறுதிக்கு முன்னேறும் போராட்டம் குரூப் சுற்றின் கடைசிப் போட்டி வரை நீண்டுள்ளது. இரு அணிகளின் கடைசி குரூப் சுற்றுப் போட்டியும் வரும் ஜூன் 28-ம் தேதி நடைபெற உள்ளது.

By admin