• Wed. Jul 9th, 2025

24×7 Live News

Apdin News

மகாராஷ்டிரா: இந்தி – மராத்தி மொழிப் பிரச்னை பற்றி தொழிலதிபர்கள் கூறுவது என்ன? மும்பையில் என்ன நடக்கிறது?

Byadmin

Jul 9, 2025


இந்தி திணிப்புப் பிரச்னை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தி திணிப்புப் பிரச்னையில் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்குப் பிறகு ராஜ் தாக்கரேவும் உத்தவ் தாக்கரேவும் இணைந்தனர்.

    • எழுதியவர், மயூரேஷ் கொன்னூர்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

கடந்த சில நாட்களாக, மகாராஷ்டிராவில், குறிப்பாக மும்பையில், மொழிப் பிரச்னையைச் சுற்றி ஒரு அரசியல் மோதல் நடைபெற்று வருகிறது. இந்தி மொழி தான் இந்த சர்ச்சையின் மையம்.

மகாராஷ்டிfஅரசின் ஒரு முடிவால் தொடங்கிய இந்த சர்ச்சை, வெறும் வார்த்தைப் போராக மட்டும் இல்லாமல், அரசியல் கட்சிகள் தெருக்களில் இறங்கி எதிர்ப்புத் தெரிவிக்கும் அளவுக்கு சென்றது.

கடந்த வாரத்தில் மும்பை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மொழி பிரச்னை தொடர்பான குறைந்தது மூன்று சம்பவங்கள் நடந்துள்ளன.

ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) கட்சியினரும், முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் கட்சியான சிவசேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) கட்சியினரும் இந்த சம்பவங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

By admin