• Tue. Jun 30th, 2026

24×7 Live News

Apdin News

மகாராஷ்டிரா: 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை – 50 நாட்களில் விசாரணையை முடித்து மரண தண்டனை விதித்த நீதிமன்றம்

Byadmin

Jun 30, 2026


புனே மாவட்டத்தில் மூன்றரை வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில், 65 வயதான பீம்ராவ் பிரபாகர் காம்ப்ளே என்பவரைக் குற்றவாளி என அறிவித்து சிறப்பு நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.

பட மூலாதாரம், UGC

படக்குறிப்பு, பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

    • எழுதியவர், பிராச்சி பிரதிபா ஷிரிஷ்
    • பதவி, பிபிசி மராத்தி
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

(இந்தச் செய்தியில் இடம்பெற்றுள்ள சில விவரங்கள் உங்களுக்கு சங்கடம் தரலாம்)

புனே மாவட்டத்தில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில், 65 வயதான பீம்ராவ் பிரபாகர் காம்ப்ளே என்பவரைக் குற்றவாளி என அறிவித்து சிறப்பு நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.

சிறப்பு நீதிபதி எஸ்.ஆர்.சாலுங்கே இந்தத் தீர்ப்பை வழங்கினார்.

இந்த வழக்கின் விசாரணை ஜூன் 25 அன்று நிறைவடைந்தது. அப்போது, குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளி என்று நீதிமன்றம் அறிவித்தது.

குற்றம் சாட்டப்பட்டவர் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை ஆகிய இரண்டு குற்றங்களையும் செய்துள்ளார் என்று புனே சிறப்பு நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

By admin