“மே 13 அன்று முடிவுகள் வெளியானபோது, நான் மொத்தம் 95.2 சதவீத மதிப்பெண்களை பெற்றிருந்தேன். அந்த மதிப்பெண்களில் என் குடும்பத்தினர் திருப்தி அடைந்தனர், ஆனால் எனக்கு அதில் திருப்தி இல்லை.
சி.பி.எஸ்.இ. இணையதளத்தில் மறுமதிப்பீட்டிற்கான பக்கம் திறக்கப்படும் வரை காத்திருந்து, பின்னர் விண்ணப்பித்தேன். மறுமதிப்பீட்டிற்கு பிறகு, நான் 500-க்கு 500 மதிப்பெண்களை பெற்றேன். இந்த முடிவில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்,” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.