ரமண மகரிஷி
ரமண மகிரிஷி தனது வாழ்வில் மவுனத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தார். அவரிடம் பல கேள்விகள் கேட்ட போது சில நேரங்களில் அவர் எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாய் அமர்ந்திருப்பார். ஆனால் அந்த மவுனமே சந்தேகங்களை தீர்த்ததாக பலரும் கூறியுள்ளனர்.
ரமணர் கூறிய ஒரு முக்கிய கருத்து
‘மவுனமே உண்மையான உபதேசம்’
கவுதம புத்தர் சில கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் அமர்ந்திருப்பார். காரணம் ‘சில உண்மைகள் வார்த்தைகளால் விளக்க முடியாதவை’ சித்தர்கள் மவுனத்தை உயர்ந்த யோக நிலையாகக் கருதினர். பட்டினத்தார் உலக வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்து இறுதியில் அமைதியான ஆன்மீக வாழ்வைத் தேர்ந்தெடுத்தார். அவருடைய பாடல்களில் உலக சத்தங்களைக் கடந்து உள்ளார். அமைதியை அடைய வேண்டும் என்ற கருத்து அடிக்கடி வெளிப்படும்.
திருமூலர் தனது திருமந்திரத்தில் மன அமைதியும், மவுனமும் இறை உணர்வுக்கு வழி காட்டும் என்று கூறியுள்ளார்.
மவுனம் மன வலிமை தரும்.
‘வாயுள்ள பிள்ளை பிழைக்கும்’ என்பது உண்மைதான். ஆனால் அளவுக்கு மீறியவாய் வாழ்க்கையே கெடுக்கும் என்பதும் உண்மை. மனிதனுக்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய வரங்களில் ஒன்று பேச்சுத்திறன். இந்த உலகில் மற்ற உயிரினங்களில் இருந்து வேறுபடுத்தி காட்டுவது அவன் சிந்தித்துப் பேசும் திறன் தான். எந்த வரமும் அளவோடு பயன்படுத்தாவிட்டால் அது ஆபத்தாக மாறிவிடும். அதுபோலவே பேச்சும் ஒரு சக்தி, அந்த சக்தியை அளவின்றி பயன்படுத்தும் பொழுது அது நமக்கு எதிராகவும் மாறுகின்றது.
வாழ்க்கையில் ஏற்படும் பல தோல்விகள், முறிந்த உறவுகள், இழந்த வாய்ப்புகள், உருவான பகைகள் ஆகியவற்றின் பின்னால் கட்டுப்பாடுற்ற பேச்சு மறைந்து இருக்கின்றது.
* எப்பொழுதும் பேசிக்கொண்டே இருந்தால் அவரது வார்த்தைகளுக்கு மதிப்பு குறைகின்றது.
* குடும்பங்களில் விரிசல் உண்டாகின்றது.
* ரகசியங்களை பாதுகாக்க முடியாமல் போகின்றது.
* மன அமைதி அழிகிறது.
* ஆன்மீக வளர்ச்சி தடைபடுகிறது. மனதை அமைதி படுத்தாமல் இறை உணர்வு கிடையாது.
* தவறான வாக்குறுதிகள் வாழ்க்கையை சிக்கலாக்கும்.
* உயர் ரத்த அழுத்தம் ஏற்படலாம்.
* கவலை அதிகரிக்கலாம்.
* மன உளைச்சல் ஏற்படலாம்.
ஆக எதற்கு இந்த அதிகப்பேச்சு? தவிர்த்து விடலாமே.
சிலவற்றினை படிக்கும் பொழுது பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றும் அவ்வகையில் சில:-
ஒரு நாள் ஒரு பணக்கார தந்தை தன் மகனை ஒரு கிராமத்திற்கு அழைத்துச் சென்றார். ஒரு ஏழை குடும்பத்திற்கு மகனை அழைத்துச் சென்றார். வறுமையின் கொடிய முகத்தினை மகன் உணர வேண்டும் என்று நினைத்தார். திரும்பும் வழியில் தந்தை மகனிடம் கேட்டார்.