• Mon. Jul 14th, 2025

24×7 Live News

Apdin News

மாதவிடாயா? மாணவிகளின் ஆடைகளை கழற்றி சரிபார்த்ததாக பள்ளி முதல்வர் கைது

Byadmin

Jul 13, 2025


மாணவிகள், போக்சோ, மும்பை, பள்ளி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்

மகாராஷ்டிராவின் தானேயில் செயல்பட்டுவரும் ஒரு பள்ளியில் மாணவிகளின் ஆடைகளை கழற்றி அவர்களுக்கு மாதவிடாய் வந்துள்ளதா என சரிபார்த்த பள்ளி முதல்வரும், பெண் ஊழியரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பள்ளியில் பெண்களுக்கான கழிப்பறை சுவரில் ரத்தக் கறைகள் காணப்பட்டதால், மாணவிகளுக்கு மாதவிடாய் இருக்கிறதா இல்லையா என்பதைச் சரிபார்க்க அவர்களின் ஆடைகளைக் கழற்றியதாக அவர்கள் இருவரும் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மாதவிடாய் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட’10 முதல் 15 சிறுமிகளில்’ ஒருவரின் தாய் அளித்த புகாரை அடுத்து, காவல்துறை நடவடிக்கை எடுத்தது. இந்தப் பள்ளியில் நர்சரி முதல் 10 ஆம் வகுப்பு வரை சுமார் 600 மாணவிகள் கல்வி பயில்கின்றனர்.

தானே மாவட்டத்தின் ஷாபூரில் செவ்வாய்க்கிழமை இந்த சம்பவம் நடந்தது. புதன்கிழமையன்று பள்ளியில் போராட்டம் நடத்திய பெற்றோர்கள், இதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரினார்கள்.

By admin