நடப்பாண்டில் மீண்டும் தனியார் பால் விற்பனை விலை உயர்வை கண்டித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
இந்தியா முழுவதும் தொடரும் வரலாறு காணாத பால் உற்பத்தி பாதிப்பு, தமிழ்நாட்டில் கடுமையான பால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்.
நடப்பாண்டில் 2வது முறையாக தனியார் நிறுவன பால், தயிர் விற்பனை விலை லிட்டருக்கு ரூ.4 உயர்வு, நாளை (09.7.2026) முதல் அமுலுக்கு வருகிறது.
பால் உற்பத்தியை அதிகரிக்க விவசாய பெருமக்களுக்கு விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டம் உடனடியாக செயல்படுத்த வேண்டும்.