• Wed. Jul 8th, 2026

24×7 Live News

Apdin News

ENG Vs IND: இந்தியாவுக்கு வரலாற்று தோல்வி; இலக்கை நெருங்காமல் செய்த 2 வீரர்கள்

Byadmin

Jul 8, 2026


ஜோஷ் டங் - ஆர்ச்சர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜோஷ் டங் – ஆர்ச்சர்

    • எழுதியவர், ஸ்டீபன் ஷெமிட்
    • பதவி, ட்ரெண்ட் பிரிட்ஜில் கிரிக்கெட் செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

ட்ரெண்ட் பிரிட்ஜில் நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு வரலாற்று தோல்வியை அளித்தது. தொடரில் இன்னும் இரண்டு போட்டிகள் மீதமுள்ள நிலையில், சொந்த மண்ணில் விளையாடும் இங்கிலாந்து அணி 2-0 என்ற முன்னிலை பெற்றுள்ளது.

வேகப்பந்து வீச்சாளர்களான ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் ஜோஷ் டங் ஆகியோர், 202 ரன்கள் இலக்கைத் துரத்திய 15 வயது பேட்டிங் சூப்பர் ஸ்டார் வைபவ் சூர்யவன்ஷி உட்பட உலக சாம்பியன்களான இந்தியா ஒருபோதும் எளிதாகக் கையாள முடியாதபடி செய்வதில் அபாரமாகச் செயல்பட்டனர்.

ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளை 29 ரன்களுக்கு வீழ்த்திய நிலையில், சூர்யவன்ஷி 13 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, ஐந்து ஓவர்களின் முடிவில் இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 52 ரன்கள் மட்டுமே எடுத்திருந்ததால், போட்டி ஏறக்குறைய முடிவுக்கு வந்தது.

தனது சொந்த மைதானத்தில் விளையாடிய ஜோஷ் டங் 28 ரன்களை கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இந்தியா வெறும் 11.4 ஓவர்களில் 76 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது, இது டி20 கிரிக்கெட்டில் அவர்களின் இரண்டாவது மிகக் குறைந்த ஆல்-அவுட் ஸ்கோர் ஆகும். அதே நேரத்தில் 125 ரன்கள் வித்தியாசம் என்பது டி20 சர்வதேச போட்டிகளில் இந்தியாவின் மிகப்பெரிய தோல்வியாகும்.

பில் சால்ட்டின் 44 பந்துகளில் 70 ரன்கள் இங்கிலாந்தின் 201-7 ரன்களுக்கு அடித்தளமாக அமைந்தது, சாம் கரன் ஆட்டமிழக்காமல் 24 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து இறுதி நேரத்தில் வேகத்தை வழங்கினார்.

By admin