• Sun. May 10th, 2026

24×7 Live News

Apdin News

முதலமைச்சர் விஜய் அறிவித்த மூன்று திட்டங்களுக்கு இருக்கும் சவால்கள் என்ன?

Byadmin

May 10, 2026


முதலமைச்சர் விஜய் அறிவித்த மூன்று திட்டங்களுக்கு இருக்கும் சவால்கள் என்ன?

பட மூலாதாரம், TNDIPR

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

தமிழ்நாடு முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பதவியேற்றுள்ளார். அவருடன் ஒன்பது பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.

விஜய் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றதும், விழா மேடையிலேயே முதலமைச்சராக அவர் தனது முதல் உத்தரவுகளைப் பிறப்பித்தார்.

குறிப்பாக, முதல் கையெழுத்தாக, தமிழ்நாட்டில் அனைத்து வீடுகளிலும் இரு மாதங்களுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் உத்தரவில் கையெழுத்திட்டார்.(500 யூனிட்டுக்குள் பயன்படுத்துபவர்களுக்கு)

அதைத் தொடர்ந்து, போதைப் பொருள் தடுப்புக்கு மாவட்டந்தோறும் சிறப்புப் படை அமைப்பது மற்றும் பெண்கள் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை அமைப்பது ஆகிய உத்தரவுகளையும் விஜய் பிறப்பித்தார்.

இந்த மூன்று உத்தரவுகளின் முக்கியத்துவம் என்ன? அவற்றை நடைமுறையில் அமல்படுத்துவதில் இருக்கும் சவால்கள் என்ன? இங்கு விரிவாகக் காண்போம்.

By admin