• Wed. Jul 23rd, 2025

24×7 Live News

Apdin News

மெட்ராசி கேம்ப் இடிப்பு: டெல்லியில் வீடுகளை இழந்த 380 தமிழ் குடும்பங்கள் இப்போது எப்படி உள்ளன? பிபிசி தமிழ் கள ஆய்வு

Byadmin

Jul 23, 2025


டெல்லி, மதராசி கேம்ப், ஜங்புரா, தலைநகர் வாழ் தமிழர்கள்

    • எழுதியவர், சங்கரநாராயணன் சுடலை
    • பதவி, பிபிசி தமிழ்

நேற்று வரை கூப்பிடு தூரத்தில் இருந்த பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்த உங்கள் குழந்தை நாளை முதல் பள்ளிக்குச் செல்ல 50 கி.மீ. பயணிக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் உங்களுக்கு எப்படி இருக்கும்?

ஐந்தாயிரம் ரூபாய் சம்பளம் தரும் வேலைக்காக 8 ஆயிரம் வாடகை கொடுத்து பெருநகரத்தில் தங்க வேண்டிய சூழலை கற்பனை செய்து பார்க்க முடியுமா? நேற்று வரை தமிழ்வழியில் படித்த குழந்தையை, நாளை முதல் இந்தி வழிக் கல்வியில் சேர்க்க நேர்ந்தால் என்ன ஆகும்?

“இதுதான் இன்று தங்களின் நிலை” எனக் கூறுகின்றனர் முன்பு டெல்லி ஜங்புராவில் வசித்த தமிழர்கள்.

ஜூன் 1ஆம் தேதி டெல்லி ஜங்புராவில் மதராசி கேம்ப்(Madrasi Camp) என்று அழைக்கப்படும் தமிழர் குடும்பங்கள் வசித்த பகுதி இடிக்கப்பட்டது.

By admin