கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்டு வந்த உபரிநீர் படிப்படியாக குறைக்கப்பட்டதால் நீர்வரத்து குறைந்து காணப்படுகிறது. இன்று காலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்ததால் நேற்று முதல் பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து பரிசல்கள் இயக்கப்பட்டு வருகிறது.