பிரதமருக்கு பாராட்டு:
கேரள மக்களுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, இந்த நடவடிக்கைக்கு வழிவகுத்ததற்காக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கும் பட்டாச்சார்யா பாராட்டு தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தில் இருந்த முந்தைய திரிணாமூல் காங்கிரஸ் அரசை குறிவைத்து பேசிய பட்டாச்சார்யா, மாநில சட்டமன்றத்தில் தங்கள் கட்சிக்கு பெரும்பான்மை இருந்த ஒரே காரணத்திற்காக, மாநிலத்திற்கு வங்காளம் என பெயர் மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறினார்.
“1947 ஜூன் 20 அன்று ஷ்யாமா பிரசாத் முகர்ஜியின் தலைமையில் மேற்கு வங்காளம் உருவானது. வங்காள இந்துக்களின் நலனுக்காக ஒரு தனி மாநிலம் தேவை என்று காங்கிரஸ் கூட கூறியிருந்தது. மேற்கு வங்கம் என்பது வெறும் பெயர் மட்டுமல்ல; அதற்கு ஒரு வரலாறு உண்டு. அதன் பெயரை ‘பச்சிம் பங்கா’ என மாற்ற வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்,” என்று பட்டாச்சார்யா கூறினார்.