• Thu. Aug 13th, 2026

24×7 Live News

Apdin News

திருப்பரங்குன்றம்: மின் துறை அமைச்சர் தொகுதியில் ’17 ஆண்டுகளாக மின்சாரமின்றி’ வாழும் குடும்பம்

Byadmin

Aug 13, 2026


மதுரை, திருப்பரங்குன்றம், மின்சாரம்
படக்குறிப்பு, தனது வீட்டின் முன் நந்தினி

    • எழுதியவர்,
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

“என் பக்கத்துக்கு வீடுகளில் ஒருசில மணிநேரம் மின்வெட்டு ஏற்பட்டாலே, ‘இன்று வீட்டில் எந்த வேலையையும் ஒழுங்காக செய்யமுடியவில்லை’ எனக் கூறுவார்கள். ஆனால், எங்கள் குடும்பம் 17 வருடங்களாக மின்சாரமின்றி வாழ்ந்து வருகிறோம்”.

திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட பனையூர் ஊராட்சியின் திருவள்ளுவர் குடியிருப்புப் பகுதியில் வசித்து வரும் நந்தினி வேல்முருகன், தனது வீட்டிற்கு மின்சார இணைப்பு வழங்க பலமுறை அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் இன்னும் அந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை எனக் கூறுகிறார்.

திருவள்ளுவர் குடியிருப்புப் பகுதியில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், தனது வீட்டிற்கு மட்டும் மின்சார இணைப்பு வழங்கப்படவில்லை என்கிறார் நந்தினி.

நந்தினியின் வீட்டிற்கு மேலே தாழ்வழுத்த மின்பாதை செல்வதால், அதை மாற்றி அமைக்க பங்களிப்பு திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து, பணம் செலுத்த வேண்டும் என்று மின்வாரியத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், “40,000 முதல் 1 லட்சம் ரூபாய் வரை கேட்கிறார்கள், நான் கூலி வேலைக்குச் செல்பவள். என்னால் அவ்வளவு பணம் கொடுக்க முடியாது” என்கிறார் நந்தினி.

‘அன்றாட வாழ்க்கை பாதிப்பு’

மதுரை, திருப்பரங்குன்றம், மின்சாரம்
படக்குறிப்பு, கீழடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பாலாஜி 10ஆம் வகுப்பும், பிரபாவதி 9ஆம் வகுப்பும் படித்து வருகிறார்.

நந்தினி வேல்முருகனுக்கு திருமணமாகி பாலாஜி, பிரபாவதி என இரு பிள்ளைகள் உள்ளனர். கீழடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பாலாஜி 10-ஆம் வகுப்பும், பிரபாவதி 9-ஆம் வகுப்பும் படித்து வருகிறார். கணவர் வேல்முருகன், உடல்நிலை காரணமாக வேலைக்குச் செல்ல முடியாமல் வீட்டிலேயே இருப்பதாக நந்தினி கூறுகிறார்.

By admin