ராகுல் காந்தி வீட்டுக்கு வெளியே போராட்டம்
இது தொடர்பாக இன்று டெல்லியில் உள்ள சீக்கிய குர்த்வாரா நிர்வாக கமிட்டி (DSGMC) தலைவர் ஹர்மீத சிங் கல்கா, பொதுச் செயலாளர் ஜெகதீப் சிங் கலோன் ஆகியோர் தலைமையில் ஏராளமானவர்கள் ராகுல் காந்தி வீட்டை நோக்கி சென்றனர். இதனால் சுனேரி பாக் சாலையில் உள்ள ராகுல் காந்தி வீட்டின் முன் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
அவர்கள் தடுப்புகள் அமைத்து போராட்டக்காரர்கள் முன்னோக்கி செல்லாதவாறு தடுத்து நிறுத்த தயார் நிலையில் இருந்தனர்.
1984-ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பான வழக்குகளில் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்ட குமாரை, காங்கிரஸ் கட்சி ஒரு நாயகனாக கருதுகிறதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று DSGMC-யின் தலைவர் தெரிவித்தார்.